A.R. Rahman
Ulunthu Vithaikaiyilae
உளுந்து வெதக்கையிலே! சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே!
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன்....



கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்.....

பெண்: உளுந்து வெதக்கையிலே! சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே!
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன்....
கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்....

பெண்: வெக்கப்படப்பில் கவுளி கத்த வலது பக்கம் கருடஞ் சுத்த
தெருவோரம் நெறகுடம் பார்க்கவும் மணிச்சத்தம் கேட்கவுமானதே!
ஒரு பூக்காரி எதுக்க வர பசும் பால்மாடு கடக்கிறதே!
இனி என்னாகுமோ? ஏதாகுமோ?
இந்தச் சிறுக்கி வழியில் தெய்வம் புகுந்து வரம் தருமோ?ஓஓஓஹோ

பெண்: உளுந்து வெதக்கையிலே! சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன்....
கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்.....

ஆண்: அனிச்சு மலரழகே அச்சு அச்சுவெல்லப் பேச்சழகே
என் கண்ணுக்குள்ள கூடு கட்டி காதுக்குள்ள கூவுங் குயிலே
நீ எட்டியெட்டிப் போகையில விட்டுவிட்டுப் போகும் உயிரே.....(2)